மேற்கூரைக்கு தீவைப்பு; 2 பேர் கைது

கடையம் அருகே மேற்கூரைக்கு தீவைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-06 19:00 GMT

கடையம்:

கடையம் அருகே உள்ள மேட்டூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது வீட்டுவாசலில் ஓலையால் வேயப்பட்ட மேற்கூரை இருந்தது. அதற்கு நள்ளிரவில் யாரோ தீ வைத்துள்ளனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் ரஞ்சன் (வயது 25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தீவைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்