கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், வத்தனாக்கோட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று வயல் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த தரைமட்ட கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்லத்துரை தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி பசு மாட்டை உயிருடன் மீட்டு வெளிேய கொண்டு வந்தனர்.