பெட்டிக்கடையில் புகையிலை விற்றவர் மீது வழக்கு

மணல்மேடு அருகே பெட்டிக்கடையில் புகையிலை விற்றவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது

Update: 2023-03-26 18:45 GMT

மணல்மேடு:

மணல்மேடு அருகே உள்ள பட்டவர்த்தி கடைவீதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் கல்யாணசுந்தரம் மகன் பிரபு (வயது33). இவர் தனது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மணல்மேடு சப்-இன்ஸ்பெக்டர் பெட்டிக்கடையில் சோதனை செய்தார். அப்பொது அந்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து பிரபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்