தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-04-11 20:03 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

சிவகாசி திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 46). கூலித்தொழிலாளியான இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து புஷ்பராஜீக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்