பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-16 18:45 GMT

தஞ்சை கரந்தை பரசுராமன் அக்ரஹாரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு ரோந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை அறிந்ததும் அந்த பகுதியில் சூதாடி கொண்டிருந்த 5 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்த சசிகுமார் (வயது 40), ராஜேந்திரன் (41), பரிசுத்தம் நகரை சேர்ந்த சுப்ரமணியன் (58), விக்னேஷ் (27), ராகவேந்திரன் (40) என்பதும், பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சூதாடிய 5 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்