அரசு ஊழியர் வீட்டில் 3 பவுன், ரூ.50 ஆயிரம் திருட்டு

சீர்காழி அருகே அரசு ஊழியர் வீட்டில் 3 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2023-10-22 18:45 GMT

சீர்காழி:

அரசு ஊழியர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேல செங்கமேடு அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 52), இவர் நாங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி சீர்காழி கருவூலத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் பணிக்குச் சென்றுள்ளனர். இவர்களது ஒரே மகன் பள்ளிக்கு சென்றுள்ளார்.

இதனை கண்காணித்த மர்ம நபர்கள் வீட்டின் கதவைத் திறந்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் பணி முடித்து வீடு திரும்பிய முத்துக்குமாரசாமி வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார், தொடர்ந்து அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்