முதியவரிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

முதியவரிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

Update: 2022-10-20 20:02 GMT

கும்பகோணம் அருகே உள்ள உமாமகேஸ்வரபுரம் பிருந்தாவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 74). இவர் அம்மாசத்திரத்தில் உள்ள மாவு மில்லில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், கண்ணனிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்