மோட்டார் சைக்கிள் திருட்டு; 3 பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-20 19:39 GMT

திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடியை சேர்ந்தவர் லூர்துசாமி மகன் கிளின்டன். இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பனந்தாள் மதுக்கடை அருகே நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அதை காணவில்லை. இது குறித்து அவர் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த ரஜினி (38), அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (35) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளை திருடி உடப்பேரியை சேர்ந்த வரதராஜன் (39) என்பவரிடம் விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்