கோவையில் மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்து: சிறுமி உள்பட 3 பேர் பலி

கோவையில் மேட்டுப்பாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். #RoadAccident

Update: 2018-02-26 03:21 GMT

கோவை,

கோவையில் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் 2 இரு சக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டன.  இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

அவர்களில் 6 வயது சிறுமி தன்ஷிகாவும் ஒருவர்.  இந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்து உள்ளனர்.  அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்