ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: பா.ஜனதாவைவிட நாம் தமிழர், நோட்டோவிற்கு அதிக வாக்குகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாவைவிட நாம் தமிழர் மற்றும் நோட்டோவிற்கு அதிக வாக்குகள் கிடைத்து உள்ளது.
சென்னை,
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கையில் பாரதீய ஜனதா கட்சியைவிட நாம் தமிழர் கட்சி அதிகமான வாக்குகளை பெற்று உள்ளது, நோட்டோவிற்கு அதிகமான வாக்குகள் கிடைத்து உள்ளது.
மூன்றாம் சுற்று முடிவுகள்:-
டிடிவி தினகரன் (சுயேச்சை) - 15,868
மதுசூதனன் (அதிமுக) - 7,033
மருதுகணேஷ் (திமுக) - 3,691
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 737
நோட்டா- 333
கரு. நாகராஜன் (பாஜக)- 220