பிளம்பருக்கு 2 ஆண்டு சிறை

மாணவிக்கு ஆபாச சைகை காட்டிய வழக்கில் பிளம்பருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-10-06 21:01 GMT

நாகர்கோவில்:

அகஸ்தீஸ்வரம் இலந்தையடிவிளையை சேர்ந்த லிங்கேசன் (வயது 53). பிளம்பரான இவர் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி வீட்டுக்கு வேலைக்கு சென்றார்.

இந்தநிலையில் கடந்த 14.10.2017 அன்று அந்த வீட்டில் வேலை பார்த்த போது தம்பதியின் மகளான 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி தனியாக இருந்தார். அப்போது லிங்கேசன் மாணவி முன்பு நின்று ஆபாச செய்கை காண்பித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி, தாயாருக்கு போன் செய்து நடந்ததை பற்றி கூறியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் லிங்கேசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகிளா மற்றும் கூடுதல் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி சுதாகர் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தார். அதில் சிறுமியிடம் ஆபாசமாக நடந்துகொண்ட லிங்கேசனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு குற்றவியல் வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்