சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளர்கள் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளர்கள் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2022-11-25 20:39 GMT

சேலம், 

பாலியல் தொல்லை

சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அம்மாசி. இவருடைய மகன் மாதேஷ் (வயது 29). அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (37). இருவரும் கூலி தொழிலாளர்கள்.

இவர்கள் 2 பேரும் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந்தேதி, 6 வயது சிறுமியை மோட்டார் சைக்கிளில் தேவூருக்கு அழைத்து சென்று மிட்டாய் வாங்கிக்கொடுத்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று 2 பேரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர்.

சிறை தண்டனை

இது குறித்து சிறுமியின் பெற்றோர் தேவூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாதேஷ், செல்வராஜ் ஆகிய 2 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்