கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-05-31 19:32 GMT

கரூர் சுங்ககேட் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் ஹேமலதா (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற ஹேமலதா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் சிந்தாபுரத்தை சேர்ந்தவர் சாந்தி தியாகம் (15). இவர் கரூர் மாவட்டம் வெண்ணெய் மலையிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்தார். இந்தநிலையில் அவர் அங்கிருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து அந்த இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் சேகர், வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்