சரக்கு வாகனம் மோதி 2 பேர் படுகாயம்

சரக்கு வாகனம் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-08-20 19:59 GMT

சிவகாசி, 

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைபெட்டி தெருவை சேர்ந்தவர் கோபிநாத் மகன் கோகுல்நாத் (வயது 19). இவர் தனது உறவினரான மணிகண்டன் மகன் மகேந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒத்தபுளி அருகே வரும் போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் கோகுல்நாத், மகேந்திரன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கோகுல்நாத் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் சரக்கு வாகன டிரைவர் வைரமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்