தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் 18 பேரையும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படை அங்கு வைத்து விசாரணை செய்து வருகிறது.

Update: 2024-06-23 01:16 GMT

ராமேஸ்வரம், 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களை 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். கைது செய்யப்பட்ட 18 மீனவர்களையும் இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட 18 பேரும் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்கள் ஆவர். கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது அதிகரித்து இருப்பதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்