வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-04-19 19:38 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 26). இவர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து அன்பரசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்