மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு

Update: 2023-07-15 18:45 GMT

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கமலா (வயது 74). நேற்று இரவு தனது வீட்டு திண்ணையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் 2 பேர் கம்பி வேலியில் ஏறிக்குதித்து உள்ளே புகுந்து கமலா கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறிக்க முயன்றனர்.

அப்போது மூதாட்டி நகையை பிடித்து கொண்டார். ஆனாலும் 9 கிராம் நகை மற்றும் காதில் கிடந்த 3 கிராம் தோட்டை பிடித்து இழுத்ததில் காது அறுந்து ரத்த காயம் ஏற்பட்டது. அப்போது மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். இதனை பார்த்த மூதாட்டி பேத்தி ஓடிவந்து பார்த்த போது, மர்மநபர்கள் 1½ பவுன் நகைகளை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் காயமடைந்த கமலா மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கமலா கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்