போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் தீபாவளி போனஸ்
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் தீபாவளி போனஸ் வழங்கப்பட உள்ளது.
மும்பை,
மராட்டிய அரசு போக்குவரத்து கழகமான (எம்.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் 16 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 93 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். வருகிற தீபாவளி பண்டிகையை யொட்டி அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் அறிவித்து உள்ளது. இதற்காக ரூ.45 கோடி நிதியுதவி மாநில அரசு வழங்கி உள்ளது.
கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று பாதிப்பால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் சாலை போக்குவரத்து கழகம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் தீபாவளி போனஸ் வழங்கப்படுவதாகவும், இந்த தொகை விரைவில் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என நிர்வாக இயக்குனரான சேகர் சான்னே தெரிவித்து உள்ளார்.