டெல்லி சந்திப்பில் நடந்தது என்ன...? கூட்டணிக்கு தலைமை யார்...! எடப்பாடி பதிலால் அதிர்ந்த அமித் ஷா...!

இதுபற்றி டெல்லி வட்டாரம் மூலம் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி முதலில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றிதான் பேசப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

Update: 2023-04-27 11:28 GMT

புதுடெல்லி

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டபிறகு நேற்று முதன் முதலாக டெல்லி சென்றதும், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி-அமித்ஷா சந்திப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மற்ற கட்சிகளும் ஆவலுடன் உற்று நோக்கின.

மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசியல் நிலவரம், பாராளுமன்ற தேர்தல், கூட்டணி, தொகுதி பங்கீடு என்று எல்லா விஷயங்களையும் அவர்கள் அலசி ஆராய்ந்தனர்.

இதுபற்றி டெல்லி வட்டாரம் மூலம் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி முதலில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றிதான் பேசப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. தே.மு.தி.க. உள்பட அனைத்து கட்சிகளையும் இடம்பெற செய்ய வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதி பட தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் எடப்பாடி பழனிசாமி அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை என்ற தகவவலும் வெளியாகி உள்ளது.

ஆனால் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு வந்தபோது தான் சற்று நெருடல்கள் ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு பாதி தொகுதியும், மீதமுள்ள கூட்டணி கட்சிகளுக்கு பாதி தொகுதியும் என்று தொகுதி பங்கீடு செய்து கொள்ளலாம் என்று அமித்ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இதற்கு சம்மதம் தெரிவிக்கப் படவில்லை. தேர்தல் சமயத்தில் இதுபற்றி விரிவாக பேசலாம் என்று அ.தி.மு.க. தலைவர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும், பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் திட்டத்தை கைவிடவில்லை.

அமித்ஷா தொடர்ந்து பேசுகையில், 'அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 20 தொகுதிகளை தாருங்கள். அதை நாங்கள் பிரித்து கொள்கிறோம். அதில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதையெல்லாம் நாங்கள் தீர்மானித்து கொள்கிறோம்' என்று கூறி இருக்கிறார்.

மேலும் எந்தெந்த தொகுதிகளை தருவீர்கள் என்பதை முன்கூட்டியே உறுதிபடுத்தினால்தான் அந்த தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்து களப்பணி செய்வதற்கு எங்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் கூறியதாக தெரிகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தடவை குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவை, வேலூர், ராமநாதபுரம் உள்பட 9 தொகுதிகளை பா.ஜனதா இப்போதே தேர்வு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதை வலியுறுத்தும் வகையில் தான் அமித்ஷா அ.தி.மு.க. கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கு 20 இடங்கள் வேண்டும் என்று கேட்டு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது

தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 25 இடங்களில் கைப்பற்றுவோம் என கூறி வருகிறார். தமிழ்நாட்டில் 10 தொகுதிகளை இலக்காக வைத்து பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால் அ.தி.மு.க தரப்போ, கூட்டணி பெரிதாவதை காரணம் காட்டி 5 தொகுதிகளோடு நிறுத்த முயற்சிப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், அமித் ஷா முன்னிலையில் ஈ.பி.எஸ். சொன்ன பதில் பாஜக தலைமைக்கு யோசனையை ஏற்படுத்தியுள்ளதாம்.

Tags:    

மேலும் செய்திகள்