காஷ்மீர் சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்தவர் பலி - குதிரை சவாரியின்போது மரம் விழுந்து நசுக்கியது

காஷ்மீர் சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்தவர் குதிரை சவாரியின்போது மரம் விழுந்து நசுக்கியதில் உயிரிழந்தார்.

Update: 2023-06-06 00:58 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் அருகே ஒரு மலைப்பாங்கான சுற்றுலா விடுதியில் சுற்றுலா பயணிகள் பலர் தங்கியிருந்தனர். தமிழகத்தை சேர்ந்த ஜனார்த்தனம் (வயது 67) என்பவரும் அந்த விடுதியில் தங்கி பொழுதுபோக்கினார்.

நேற்று அவர் விடுதியில் குதிரை சவாரி சென்றபோது, பலத்த காற்று வீசியது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. அது குதிரையில் பயணம் செய்த ஜனார்த்தனம் மீது விழுந்து அமுக்கியது. இதில் குதிரையுடன், சேர்த்து ஜனார்த்தனமும் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்