ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் உயிரிழப்பு

பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2024-07-06 11:08 GMT

கோப்புப்படம் 

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ளமோடர்காம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையின் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்