கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - 3 பேர் கைது

கரிப்பூர் விமான நிலையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2022-09-20 17:03 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில், சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3.06 கிலோ மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஒரே நாளில் 3 வெவ்வேறு சம்பவங்களில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.36 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்