கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை

தமிழகம் மற்றும் கேரளாவில் 19 முதல் 21-ந்தேதி வரையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2024-05-19 01:53 GMT

திருவனந்தபுரம்,

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும். பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடப்படுகிறது.

இதுதவிர, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கனமழையால், வெள்ளம் ஏற்படுவதுடன் நகர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்க கூடும். தொடர் கனமழையால் நிலச்சரிவும் ஏற்பட கூடும்.

வருகிற 23-ந்தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், 19 முதல் 21-ந்தேதி வரையிலான 3 நாட்களில் மிக கனமழை பெய்ய கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹியில் 22-ந்தேதியன்றும், தெற்கு உள்கர்நாடக பகுதிகளில் 18 முதல் 20-ந்தேதி வரையிலான 3 நாட்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும்.

தமிழகம் மற்றும் கேரளாவில் 19 முதல் 21-ந்தேதி வரையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்