கேரளாவில் ரெயில் பெட்டிக்கு தீ வைத்த சம்பவம் - குற்றவாளியை நேரில் அழைத்து சாட்சியங்கள் சேகரிப்பு

ரெயிலில் தீ வைத்தது தொடர்பாக பிரசோன்ஜித் சிக்தரிடம் போலீசார் சாட்சியங்களை சேகரித்தனர்.

Update: 2023-06-09 17:14 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் 1-ந்தேதி கண்ணூர்-ஆலப்புழா ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, ஒரு பெட்டின் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரசோன்ஜித் சிக்தர் என்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் பிரசோன்ஜித் சிக்தரை 8 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. இந்நிலையில் இன்று பலத்த பாதுகாப்புடன் கண்ணூர் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பிரசோன்ஜித் சிக்தரிடம், ரெயிலில் தீ வைத்தது தொடர்பாக போலீசார் சாட்சியங்களை சேகரித்தனர்.

பிரசோன்ஜித் சிக்தர் ரெயிலில் தீ வைப்பதற்கு முதல் நாள் கண்ணூருக்கு வந்துள்ளார் என்றும், பசியுடன் இருந்த அவர், விரக்தியின் காரணமாக ரெயில் பெட்டிக்கு தீ வைத்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்