அ.தி.மு.க. கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. மேலிடத்தில் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. மேலிடத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

Update: 2023-09-30 10:16 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்டோபர் 3-ந்தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதனிடையே தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசிக்க உள்ளார். இதற்காக நாளை அண்ணாமலை டெல்லி செல்கிறார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிந்த நிலையில், இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை ஆலோசிக்க உள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. மேலிடத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பா.ஜ.க. மேலிட உத்தரவின் பேரில் தமிழக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு இந்த அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க. பிரிந்து சென்றதால் ஏற்படும் விளைவு பற்றியும், அ.தி.மு.க. இன்றி பா.ஜ.க.வால் வலுவான கூட்டணியை அமைக்க முடியுமா என்பது தொடர்பாகவும், அண்ணாமலைக்கும், அ.தி.மு.க.வுக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்தும் அந்த அறிக்கையில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்