மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

மணிப்பூர் மாநிலம் தௌபாலில் நேற்று இரவு 11.41 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

Update: 2022-10-23 20:10 GMT

தௌபால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தௌபால் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது. நேற்று இரவு 11.41 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 40 கிமீ ஆழத்தில் இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்