தெலுங்கானாவில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-05 10:28 GMT


தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் அருகே இன்று காலை 8.12 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிசாமாபாத்துக்கு வடமேற்கில் 120 கி.மீ. தொலைவில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது.

பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்