பூட்டிய வீட்டுக்குள் விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை: போலீசார் விசாரணை

திருமணம் செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல் ஒன்றாக அவர்கள் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

Update: 2024-06-05 20:49 GMT

ஆனேக்கல்,

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா சாலை ஜனதா காலனியை சேர்ந்தவர் பிரபு (வயது 38). டிரைவர். இவருடன் லக்கம்மா (30) என்ற பெண்ணும் வசித்து வந்தார். அவர் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். காதல் ஜோடியான இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அவர்களது வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி உள்ளது. உடனே அந்த பகுதியினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனே அவர்கள் இதுகுறித்து பன்னரகட்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் வீட்டு கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ஒரு அறையில் அழுகிய நிலையில் பிரபுவும், லக்கம்மாவும் பிணமாக கிடந்தனர். அவர்கள் 3 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிந்தது.

இதையடுத்து அவர்களது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி விசாரணை நடத்தினர். அப்போது திருமணம் செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல் ஒன்றாக பிரபு, லக்கம்மா வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் குடும்பத்தை பிரிந்து வந்து வேலை பார்த்தபடி வாழ்ந்தது தெரிந்தது.

ஆனால் அவர்கள் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்கள் என்பது தெரியவில்லை. அதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தற்கொலை விவகாரம் குறித்து வீட்டின் உரிமையாளர் விஸ்வனாத்திடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்