ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அடுத்த வாரம் விசாரணை

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்தது.

Update: 2023-07-03 15:22 GMT

டெல்லி,

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிய சட்டம் 370-ஐ மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்து சட்டம் 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்த நிலையில் இந்த வழக்கு வரும் 11-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு அடுத்தவாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கூறுகையில், இறுதியாக வழக்கு விசாரணைக்கு நீதிபதிகள் அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என நம்புகிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்