டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த கெஜ்ரிவால்

டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று தரக்குறியீடு மோசமடைந்து வருகிறது.

Update: 2023-11-02 15:57 GMT

புதுடெல்லி,

டெல்லியின் அண்டை மாநிலங்களில், பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளை எரிப்பதனால், டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என நீண்டகால குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று தரக்குறியீடு மோசமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் தலைமையில் நேற்று சீராய்வு கூட்டம் ஒன்று டெல்லி செயலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில், டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அளவு மற்றும் அதனை தடுப்பதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் எக்ஸ் சமூக ஊடகத்தில் இன்று வெளியிட்டு உள்ள பதிவில், டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை அடுத்து, அடுத்த 2 நாட்களுக்கு அனைத்து அரசு மற்றும் தனியார் முதன்மை பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்