சரத்பாபு மறைவு: ரசிகர்களின் வலியில் நானும் பங்கு கொள்கிறேன் - கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்

பிரபல தென்னிந்திய நடிகர் சரத் பாபுவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன் என கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2023-05-22 12:06 GMT

பெங்களூரு,

தமிழ் சினிமாவில் நாயகன், குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகர் சரத்பாபு. இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்பாபு உயிரிழந்ததாக வதந்தி தகவல் பரவி வந்த நிலையில், அவருடைய குடும்பத்தினர் அவர் நலமுடன் உள்ளார் என்று விளக்கம் கொடுத்தனர்.

இந்தநிலையில், "பிரபல தென்னிந்திய நடிகர் சரத் பாபுவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அமிர்தவர்ஷினி படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் வலியில் நானும் பங்கு கொள்கிறேன்" என கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ட்வீட் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்