113 நாட்களுக்கு பிறகு முதல்முறை: 500-ஐ தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு

நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

Update: 2023-03-12 19:09 GMT

புதுடெல்லி,

நம் நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 456 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 500-ஐ கடந்தது. 24 மணி நேரத்தில் 524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 113 நாட்களுக்கு பிறகு இந்த அளவுக்கு தினசரி பாதிப்பு பதிவானது இதுவே முதல் முறை.

இதுவரை இந்த தொற்று 4 கோடியே 46 லட்சத்து 90 ஆயிரத்து 492 பேரைப் பாதித்து இருக்கிறது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் 96 ஆயிரத்து 170 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

நேற்று ஒரு நாளில் தொற்றில் இருந்து 311 பேர் குணம் அடைந்துள்ளனர். 4 கோடியே 41 லட்சத்து 56 ஆயிரத்து 93 பேர் இதுவரை குணம் அடைந்திருக்கிறார்கள்.

நேற்று கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் ஒன்றைப் பதிவு செய்தனர். மற்றபடி எங்கும் தொற்றால் உயிர்ப்பலி இல்லை என்பது ஆறுதல் தகவல். தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 781 ஆக உள்ளது. நேற்று கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 212 அதிகரித்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 618 ஆகும்.

 

Tags:    

மேலும் செய்திகள்