என்ஜின் கோளாறு: புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்

என்ஜின் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் இண்டிகோ விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

Update: 2024-08-31 13:26 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து நேற்று இரவு 10.36 மணிக்கு இண்டிகோ விமானம் கர்நாடகாவின் பெங்களூரு நோக்கி புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்த சில நிமிடங்களில் இடதுபக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இது குறித்து அறிந்த விமானி உடனடியாக விமானத்தை கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர், பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்