ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.

Update: 2022-06-17 12:43 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானை மையமாக கொண்ட ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் அதிர்வுகளை பிற்பகல் 2.52 மணியளவில் உணர முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நில அதிர்வால் வீடுகள் குலுங்கியது. இதனால், பீதி அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும் நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. 

Tags:    

மேலும் செய்திகள்