டெல்லி மகளிர் ஆணையத்துக்கு கடந்த ஓராண்டில் 6.3 லட்சம் அழைப்புகள்

டெல்லி மகளிர் ஆணையத்துக்கு கடந்த ஓராண்டில் 6.3 லட்சம் அழைப்புகள் வந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-12 23:58 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், டெல்லி மகளிர் ஆணையத்துக்கு வந்த புகார்கள் மற்றும் வழக்குகள் பற்றி புள்ளிவிவரம் வெளியிட்டு உள்ளார். பிரச்சினைகளில் சிக்கும் பெண்கள் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க 181 என்கிற எண் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணில் கடந்த 7 ஆண்டுகளில் 40 லட்சம் பேர் அழைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூலை வரை 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் அழைத்துள்ளனர். இந்த அழைப்புகளை அடுத்து 92 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 38,342 வழக்குகள் குடும்ப வன்முறை வழக்குகள் ஆகும். 5,895 வழக்குகள் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பானவை. 3,447 வழக்குகள் போக்சோ சட்டத்துடன் தொடர்புடையவை. 4,229 வழக்குகள் கடத்தல் வழக்குகள்.

92 ஆயிரம் வழக்குகளில் 38,140 வழக்குகள் 21 முதல் 31 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் பதியப்பட்டவை. 16,939 வழக்குகள் 11 வயது முதல் 20 வயது வரையிலான பெண்களுக்கானவை. 3,735 வழக்குகள் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காகவும், 40 வழக்குகள் 90 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காகவும் பதியப்பட்டவை.

இந்த புள்ளி விவரங்களை மத்திய உள்துறை மந்திரியின் கவனத்துக்கு கொண்டு செல்ல டெல்லி கவர்னர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்