இந்தியாவில் 71 பேருக்கு கொரோனா

24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து 68 பேர் குணமடைந்தனர்.

Update: 2023-09-07 22:45 GMT

புதுடெல்லி,

நாட்டில் நேற்று முன்தினம் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனாவுக்கு ஆளானவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 97 ஆயிரத்து 537 ஆக உயர்ந்தது.

24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து 68 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 65 ஆயிரத்து 19 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 3 அதிகரித்தது. மொத்தம் 494 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று முன்தினம் ஒருவர் பலியான நிலையில், நேற்று உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 32 ஆயிரத்து 24 ஆக நீடிக்கிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்