"சந்திரயான்-3 வெற்றி பெற்றதற்கு இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துகள்" - காங். எம்.பி. ராகுல்காந்தி

நிலவு பற்றிய ஆராய்ச்சியில், ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.

Update: 2023-08-23 14:29 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சந்திரயான் 3 லேண்டரின் வெற்றிக்காக இஸ்ரோவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். "சந்திரயான்-3 வெற்றி பெற்றதற்கு இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துகள். நிலவின் தென்துருவத்தில் இந்தியா முதன்முதலாக கால் பதித்திருப்பது, நம் அறிவியல் சமூகத்தின் பல ஆண்டுகால கடின உழைப்பின் விளைவாகும். 1962ம் ஆண்டு முதல் இந்திய விண்வெளித்துறையின் திட்டங்கள் புதிய உயரங்களை எட்டி வருவதோடு இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்