கோவை கார் வெடிப்பு - என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-27 09:57 GMT

புதுடெல்லி,

கோவையில் கார் வெடித்து வாலிபர் பலியான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்க தமிழக அரசு அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. என்.ஐ.ஏ விசாரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்த நிலையில் உள்துறை அமைச்சகத்தின் தீவிரவாத தடுப்புப்பிரிவு உத்தரவிட்டுள்ளது.

கோவை கார் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலான்வு அமைப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்