சத்தீஷ்கார்: தலைக்கு ரூ.8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட்டு போலீசில் சரண்

சத்தீஷ்காரில் தலைக்கு ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட்டு போலீசார் முன் சரணடைந்து உள்ளார்.

Update: 2022-10-13 04:25 GMT



ராய்ப்பூர்,


சத்தீஷ்காரில் சுக்மா உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் பரவலாக காணப்படுகிறது. அவர்கள், அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களை இலக்காக கொண்டு தாக்குதல், கடத்தல் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.

இதுதவிர, போலீசாருடனான மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு எதிரான வன்முறை செயல்களிலும் ஈடுபட்டு பொதுமக்கள், போலீசார் மற்றும் அரசியல்வாதிகள் என பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நக்சலைட்டுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை சத்தீஷ்கார் போலீஸ் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நக்சலைட்டுகள் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்து வருகின்றனர்.

இதன்படி, சத்தீஷ்காரில் பெண் நக்சலைட்டாக செயல்பட்ட புஜ்ஜி என்ற ஜனனி பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.8 லட்சம் பரிசு வழங்கப்படும் என சத்தீஷ்கார் போலீசார் அறிவித்தனர்.

இந்த சூழலில் அதனை தவிர்க்கும் வகையில், ஜனனி என்ற அந்த பெண் நக்சலைட்டு, கேங்கர் மாவட்டத்தில் அந்தகார் பகுதியில் உள்ள போலீசில் நேரில் சென்று சரணடைந்து உள்ளார். நக்சலைட்டான இவரது கணவரும் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி போலீசில் சரணடைந்து உள்ளார்.

போலீசில் சரண் அடைந்தததற்காக ரூ.10 ஆயிரம் போலீசார் தரப்பில் இருந்து பரிசாக ஜனனிக்கு வழங்கப்பட்டு உள்ளது என சத்தீஷ்கார் போலீசார் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்