நாளை மறுநாள் கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்

காவிரி நதி நீரை பகிர்ந்துகொள்வதற்காக ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது.

Update: 2023-11-21 10:51 GMT

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

இந்த நிலையில் நாளை மறுநாள் 90-வது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறவுள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்திற்கு, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 3ம் தேதி இந்த கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 23ம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் 23ம் தேதி நடக்கும் கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவு படி கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துள்ளதா? என்பது பற்றி கணக்கீடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்