பீகார்: கங்கையில் நீராடியபோது 4 பேர் நீரில் மூழ்கி பலி

உயிரிழந்த 4 பேரும் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்

Update: 2024-07-22 07:59 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நயா டோலா கிராமத்தை சேர்ந்தவர்கள் புனித நீராடுவதற்காக கங்கை நதிக்கு சென்றுள்ளனர். மொத்தம் 11 பேர் ஆற்றில் இறங்கி நீராடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென அவர்கள் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.

அவர்களில் 7 பேர் பத்திரமாக நீந்தி கரையை சேர்ந்தனர். எனினும், 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 4 பேரும் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்