திருப்பதி மலைப்பாதையில் சுற்றித் திரிந்த மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது!

திருப்பதி மலைப்பாதையில் சுற்றித் திரிந்த மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது.

Update: 2023-09-07 02:25 GMT

திருப்பதி,

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பெற்றோர்களுடன் அலிபிரி நடைபாதையில் நடந்த சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது. இதனையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி இரண்டு நடைபாதைகளில் உள்ள வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டது. இதுவரை இந்த கூண்டுகளில் 4 சிறுத்தைகள் பிடிபட்டன. இந்த சிறுத்தைகள் திருப்பதி வன உயிரின பூங்காவில் விடப்பட்டன.

இந்த நிலையில், திருப்பதி நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியுள்ளது. பிடிபட்ட சிறுத்தையை, வனத்துறை அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, அதனை உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்தனர். இதுவரை 5 சிறுத்தைகள், கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்