ஜம்மு-காஷ்மீரில் போதை பொருள் கடத்திய 3 நபர்கள் கைது

ஜம்மு-காஷ்மீரில் மூட்டையில் மறைத்து வைத்து 40 கிலோ போதை பொருள் கடத்திய 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-07-11 17:36 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர், சம்பா மாவட்டத்தில் 40 கிலோ போதை பொருட்கள் கடத்திய 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பா மாவட்டத்தின் மன்சார் மோர் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த டிராக்டரில் 2 மூட்டைகளில் வைத்து சுமார் 40 கிலோ போதை பொருள் கடத்தப்படுவதை கண்டிப்பிடித்தனர்.

இதனையடுத்து, போதை பொருட்கள் கடத்திய அனில் குமார், தீப் குமார் மற்றும் ஹர்ஜீத் சிங் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 40 கிலோ போதைப்பொருள் மற்றும் போதை பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்