சிசோடியா மீது ரூ.292 கோடி ஊழல் குற்றச்சாட்டு அமலாக்கத்துறை தகவல்

டெல்லி மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா சிக்கி உள்ளார்.

Update: 2023-03-10 22:45 GMT

புதுடெல்லி, 

டெல்லி மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா சிக்கி உள்ளார்.

அவரை தங்களது காவலில் எடுத்து விசாரிப்பதற்கு டெல்லி தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த ஆவணத்தில், மணிஷ் சிசோடியா ரூ.292.80 கோடி அளவுக்கு லஞ்சம் பெறுவதற்கு ஏற்ற வகையில் மதுபானக்கொள்கையை உருவாக்குவதற்கு மற்றவர்களுடன் சேர்ந்து சதி செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஊழலில் சிசோடியா முக்கிய பங்கு வகித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்