காஷ்மீரில் பாலம் இடிந்ததில் 2 லாரிகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்து

பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்ததில், பாலத்தில் சென்ற லாரிகள் ஆற்றில் விழுந்தன.

Update: 2023-02-13 21:34 GMT

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் படோரா ஆற்றில் பாலம் ஒன்று உள்ளது. மாகூர் மற்றும் ஜாஸ்ஸானா பகுதிகளை இணைக்கும் இந்த பாலத்தில் 2 கனரக லாரிகள் சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றது.

அப்போது பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்தது. இதையடுத்து பாலத்தில் சென்ற லாரிகள் ஆற்றில் விழுந்தன. இதில் 2 லாரிகளின் டிரைவர்களும் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்