இந்தியாவில் மீண்டும் உயர்ந்த தொற்று: ஒரே நாளில் 10,542 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரேநாளில் 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-19 04:05 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று 7,633 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 10,542 ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,233 லிருந்து 63,562 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 38 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை 5,31,152 லிருந்து 5,31,190 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,34,859 லிருந்து 4,48,45,401 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்