இந்த நடிகருடன் தன்னை ஒப்பிட்டு பவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்த மம்முட்டி

பவன் கல்யாண் படத்தில் வில்லனாக நடிக்க மம்முட்டி மறுத்ததாக தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

Update: 2024-07-28 03:58 GMT

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. சமீபத்தில் இவர் நடித்த பிரமயுகம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து இவர் நடித்த 'டர்போ' படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பவன் கல்யாண் படத்தில் வில்லனாக நடிக்க மம்முட்டி மறுத்ததாக தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2019 ல், மம்முட்டி, உன்னி முகுந்தன், இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மாமாங்கம். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வின்போது, ஜல்சா பட தயாரிப்பாளர் ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டார்.

பவன் கல்யாணுக்கு வில்லனாக ஒரு படத்தில் மம்முட்டி நடிக்க தான் ஆசைப்பட்டதாக கூறினார். படத்தின் பெயரை அல்லு வெளியிடாத நிலையில், அவர் 2008ம் ஆண்டு வெளியான ஜல்சா படத்தை பற்றி பேசுகிறார் என்று ஊகிக்கப்பட்டது.

பின்னர், அல்லு அரவிந்த் இது குறித்து வெளிப்படுத்தினார். ஜல்சா படத்தில் பவன் கல்யாணுக்கு வில்லனாக மம்முட்டி நடித்தால் படத்திற்கு வலுவாக இருக்கும் என்பதால் மம்முட்டியை அணுகியதாக கூறினார்.

ஆனால், மம்முட்டி அதனை மறுத்ததாகவும், அதற்கு காரணமாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி போன்ற ஒரு நடிகருக்கு இதுபோன்ற ஒரு பாத்திரத்தை வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைப்பதாக மம்முட்டி கூறியதாகவும் அல்லு கூறினார்.

இவ்வாறு தன்னை சிரஞ்சீவியுடன் ஒப்பிட்டு பவன் கல்யாணுக்கு வில்லனாக நடிக்க, மம்முட்டி மறுத்திருக்கும் செய்தி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்