இரவு 10 மணி வரை சென்னை உட்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இரவு 10 மணி வரை சென்னை உட்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-09-24 14:28 GMT

சென்னை,

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது எழும்பூர், சென்டிரல் , சேப்பாக்கம், போரூர், கிண்டி, அடையாறு , திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், தரமணி, பட்டினப்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், மாம்பலம் , தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் பெய்தது.

இந்த நிலையில், சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்