புரோ கபடி லீக்: யு மும்பா அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி - யு மும்பா அணிகள் மோதின.

Update: 2024-10-18 21:17 GMT

image courtesy: ProKabaddi twitter

ஐதராபாத்,

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி, தெலுங்கு டைட்டன்சை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி - யு மும்பா அணிகள் மோதின. இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 36-28 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் (இரவு 8 மணி), புனேரி பால்டன் - அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்