பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து

இன்று இரவு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோத உள்ளன.

Update: 2024-08-06 16:29 GMT

Image Courtesy: AFP

பாரீஸ்,

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஆக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் இந்தியா, ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஆண்கள் ஆக்கியில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

முதல் அரையிறுதியில் நெதர்லாந்து - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே நெதர்லாந்து வீரர்கள் அபாரமாக ஆடினர். அவர்களது ஆட்டத்துக்கு ஸ்பெயின் அணியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இறுதியில், நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று இரவு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோத உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்